Tuesday, December 25, 2007

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விடதோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிடவெற்றி
பெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமேதுன்பங்களையும் துயரங்களையும்மறக்கச்செய்யும் இடம்

Monday, December 17, 2007

எதிர்பாராதே அதிகமாய் கொடு.
கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு



இருப்பதை செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னை காப்பற்ற உதவும்.

காதல் சொன்னால் உடனே நம்பி
பின் அவஸ்த்தைபடாதே.

பிறரின் இலட்சியக் கனவுகளை கண்டு
ஏலனம் செய்யாதே..
முடிந்தால் உதவியாய் இருந்துவிடு

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்து
விடுவார்த்தைகளை அளவாக பேசிவிடு

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.

மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை
மற்றவர் சொல்லும் போதுகை
கட்டி நின்று கேட்கநேரிடும்.

Saturday, November 17, 2007

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

மதத்தை விட மனதை கண்டு
கொள்ளமுயற்சி செய்தால்
பிரிவினை என்பது கிடையாது.
சிந்தனை துளிகள்
-----------------------------

பொது அறிவு மடமையானது
ஓழுங்கற்ற அறிவு உபயேகாம் இல்லாதது.

வாழ்க்கையில் பிரியமான நண்பர்களை
சந்தித்து கிடைத்த அன்பை விட
தாயின் விவரிக்முடியாத
அன்பை யாரலும் பெற்று தரமுடியாது

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்.

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்

Friday, February 17, 2006

பாருங்கள்..சிந்தியுங்கள்

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/
பாருங்கள்..சிந்தியுங்கள்



நட்புக்கு அழகு முக்கியம் அல்ல
நல்ல மனது முக்கியம்.

மனம் விட்டு பேசுங்கள்
நீங்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று புரிந்து கொள்வார்கள்.

சொல்ல வேண்டியதை சொல்லுங்கள்
வேண்டாத விடயத்தை சொல்லாதீர்கள்.

உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்
விலத்திச் செல்லும்படி நடக்காதீர்கள்.

நாம் நாமாக இருக்கும் வரை
நட்பை மகிழ்ச்சியாக தொடரலாம்.

உங்கள் விருப்பத்திற்கு நண்பனை..
மாற்ற முயற்சி செய்தால் நட்பில்
மாறுபாடு ஏற்படும்.


சந்தித்தவுடன் நண்பராக்கி கொள்ளாதீர்கள்
முதலில் அவர் நண்பர்கள் யார் எனத்..தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவரின் உண்மையான சுபாவத்தை
அறிந்து கொள்ளபொறுமையும் நிதானமும் தேவை.

பெருமை கொண்டவன் தன்...
நிலை மறக்கின்றான் .

பொறாமை கொண்டவன்
நட்பை இழக்கின்றான்.

தோல்விகள் சந்திக்கும் போது அவற்ரை சாதகமான மன...
நிலையுடன் நோக்க வேண்டும்.

தவறுகளை திருத்துங்கள் இல்லை மற்றவரின்
ஆலோசனையை கேளுங்கள்
.

அன்புடன்.
ராகினி.

Thursday, February 16, 2006


கொஞ்சம் சிந்திப்போம்.



உன்னை அழிக்க வந்தால் அன்பைக் கொடு
அவன் தன் பிழை உனருவான்.

புன்னகை ஒரு நோய் தீர்கும் மருந்து
அதை முடியும் வரை..தொடர்.

உன்னை பிழை சொல்கின்றான் என்று கவலைப்பட முன்
நீ...என்ன செய்தாய் என்பதை உணர்ந்து விடு.

வாழ்க்கையில் பயம் தேவை
வாழ்க்கையே பயமாகக்கூடாது.
-------
அன்புடன்
ராகினி

சிந்திப்போம்..நில்லுங்கள் .



எதையும் முடிப்பேன் என்ற என்னம் மனதில் எழுந்தால் அதை முடிக்கும் திறமை உன்னிடம் உண்டு,

வாழ்கையை நேசிக்க வேண்டும்
அப்போதுதான் வாழ்கை இன்பமாகும்.

சந்தேகம் தான் வாழ்கை என்றால்
வாழ்கையே..கேள்விக்குறியாகிவிடும்

பழகும் விதம் கண்டு சந்தேகம் கொள்.

சந்தேகிக்கும் குணம் இருந்தால் உன்னை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே..இருக்கும்.

உள்ளத்தில் கருணையில்லாவிட்டாலும்
வார்த்தையில் பண்பு வேண்டும்.

--------------
என் உள்ளத்தில் எழுந்த ஓசைகளை. உங்களிடம் சமர்ப்பணம்செய்கின்றேன்.
அன்புடன்
ராகினி.

------- -------- -------

தொடுப்புகள் [ LINKS ]

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்

நிலா எப்.எம்