Monday, December 17, 2007

எதிர்பாராதே அதிகமாய் கொடு.
கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு



இருப்பதை செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னை காப்பற்ற உதவும்.

காதல் சொன்னால் உடனே நம்பி
பின் அவஸ்த்தைபடாதே.

பிறரின் இலட்சியக் கனவுகளை கண்டு
ஏலனம் செய்யாதே..
முடிந்தால் உதவியாய் இருந்துவிடு

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்து
விடுவார்த்தைகளை அளவாக பேசிவிடு

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.

மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை
மற்றவர் சொல்லும் போதுகை
கட்டி நின்று கேட்கநேரிடும்.

No comments: